Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கு வாக்களித்திருப்பது எவ்வளவு பெரிய கேடு: நமது அம்மா விமர்சனம்

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (07:48 IST)
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் திமுக ஆதரவு நாளேடான 'முரசொலி' மு.க.ஸ்டாலினை போற்றி புகழ்ந்தும், அதிமுக ஆதரவு நாளேடான 'நமது அம்மா' திமுகவை வசை பாடியும் மாறி மாறி கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன
 
அந்த வகையில் இன்றைய நமது அம்மா நாளிதழில் திமுகவுக்கு வாக்களித்திருப்பது எவ்வளவு பெரிய கேடு என்பதை மக்கள் உணர்வார்கள் என்று தலையங்கம் எழுதியுள்ளது. இந்த தலையங்கத்தில், 'உண்மைக்கு மாறாக பொய்யான பிரச்சாரங்களை செய்து, ஊடக கூலிகளை உடன் வைத்து கொண்டு கட்டுக்கதைகளை திமுக அவிழ்த்துவிட்டதாகவும், ஏழை எளிய மக்களை ஏமாற்றி பாஜக கூட்டணியை திமுக வஞ்சகத்தால் வென்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் மக்கள் திமுகவுக்கு வாக்களித்தது எவ்வளவு பெரிய கேடு என்பதை உணர தொடங்கிவிட்டதாகவும், அதேபோல் ஓட்டு போட்ட மை காய்வதற்குள் தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளை பாஜக கூட்டணி அள்ளித்தந்து கொண்டிருப்பதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த இரு பத்திரிகைகளும் ஒருவர் மீது ஒருவர் அநாகரீகமான முறையில் விமர்சனம் செய்வது ஊடகத்தர்மத்திற்கு நல்லதல்ல என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments