Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் பொருளாளர் பதவி; குறிவைக்கும் முன்னாள் அமைச்சர்கள்! – வேற ப்ளானில் எடப்பாடியார்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (13:16 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறி வரும் நிலையில் பொருளாளர் பதவியிலிருந்தும் நீக்க திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

அதை தொடர்ந்து கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் நேற்று ஓபிஎஸ்க்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, கடந்த பொதுக்குழுவில் அதற்கு முந்தைய பொதுக்குழுவின் தீர்மானங்கள் புதுப்பிக்கப்படாததால் இனி ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் கிடையாது என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக நமது அம்மா நாளிதழின் நிறுவனர் என்ற பெயரிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டார்.

அடுத்தக்கட்டமாக ஓபிஎஸ்ஸிடம் மீதம் உள்ள கழக பொருளாளர் பதவியையும் பறிக்க எடப்பாடி பழனிசாமி அணி முயற்சித்து வருவதாக தெரிகிறது. ஜூலை 11ல் நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிறகு கழக பொருளாளர் பதவியை பெறுவதற்கு எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் ஆர்வம் காட்டி வருவதால் போட்டி அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments