Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெனச்ச உடனே கவிழ்க்குறதுக்கு அதிமுக ஒன்னும் சட்டி பானை இல்ல - ஜெயக்குமாரின் பஞ்ச்

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (14:50 IST)
கவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு சட்டிப்பானை அல்ல என டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எஸ்.வி சேகர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அவரை கைது செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என அமைச்சர் கூறினார்,
மேலும் அதிமுக மத்திய அரசின் கைக்கூலி எனவும், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக அரசு கவிழும் என  டிடிவி தினகரன் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுடன் டிடிவி தினகரன் இணக்கமாக இருக்கிறார். கவிழ்ப்பதற்கு அதிமுக அரசு சட்டியோ, பானையோ அல்ல என பஞ்ச் பேசி டிடிவிக்கு பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments