தேர்தல் நாளில் அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை.. வேலூரில் பரபரப்பு

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (14:04 IST)
வேலூரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மாட்டு வண்டித் தொழிலாளி ஆவார். இவர் இந்த பகுதி அதிமுக பிரமுகரில் மிகவும் பிரபலமானவர். மேலும் அதிமுக-வில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்.

இந்நிலையில் இன்று காலை, சேண்பாக்கம் தேவாலயம் அருகே சேகர் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த சில மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த சுத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களால் சேகரை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதில் பலத்த காயமுற்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சேகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது சம்பந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று வேலூரில் பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பிரமுகர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தம்! பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை

மு.க. ஸ்டாலினை உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு உங்களால் கேட்க முடியுமா? மெஹபூபா முஃப்தி ஆவேசம்

'ஆபரேஷன் ஆகத்.. 24 மணி நேரத்தில் 660 பேர் கைது.. 2800 பேரிடம் தீவிர விசாரணை.. என்ன நடந்தது?

முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மோத தயார்.. ஈபிஎஸ் விடுத்த சவால்..!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இன்றும் நாளையும் மிஸ் செய்துவிட வேண்டாம்.. அடுத்த வாய்ப்பு ஜனவரி 3,4..

அடுத்த கட்டுரையில்
Show comments