Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை காப்பாற்றி கொள்ள அதிமுகவுக்கு கிடைத்த இன்னொரு ஐடியா!

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (06:58 IST)
மூன்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகரால் அனுப்பட்ட நோட்டிஸ் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் மே 23, தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக அரசு என்ன ஆகுமோ? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் மூன்று எம்.எல்.ஏக்கல் விவகாரம் குறித்த வழக்கு முடிவுக்கு வரும் வரை சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதோ, அரசு மீதோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என அதிமுக அரசு சுப்ரீம் கோர்டில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
அவ்வாறு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டால் இந்த மனுவின் விசாரணையும் மூன்று எம்.எல்.ஏக்கள் வழக்கின் விசாரணையும் முடியும் வரை அதிமுக தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ள்ள வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் முடிவடைய ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டால் அதன் பின் உள்ள மீதி ஒரு வருடத்தை ஏதாவது செய்து ஆட்சியை அதிமுக காப்பாற்றி கொள்ளும் என்றே கருதப்படுகிறது
 
ஒருவேளை இந்த ஐடியா பயனளிக்கவில்லை என்றால் ஐந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் வரை ஆட்சியை காப்பாற்றி கொள்ளலாம் என்றும் அதிமுக தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மொத்தத்தில் திமுக தலைவரின் முதல்வர் கனவு 'கானல் நீராகிவிடும் என்று அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அமலாக்கத்துறை முக்கிய அதிகாரி திடீர் ராஜினாமா.. இரு முதல்வர்களை கைது செய்தவர்..!

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments