Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் முதல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (13:03 IST)
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி முதல் அறிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில் அந்த தீர்ப்பில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொருள் பொதுச் செயலாளர் பதவியேற்ற பின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமை சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்டத்திட்ட விதிமுறைப்படி கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி புதன்கிழமை தலைமை கழகத்தின் விநியோகப்பட்ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து ஒரு உறுப்பினருக்கு ரூபாய் 10 வீதம் தலைமை கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments