Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (16:45 IST)
அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பினருக்குத் தடை கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த வழக்கு தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என  எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக கட்சியிலிருந்து ஓ பன்னீர்செல்வத்தை  நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்ததால் இந்த வழக்கை நீதிபதி 
நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனுவுக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments