Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து சசிக்கலாவுடன் போனில் பேசும் அதிமுகவினர்! – 5 பேரை நீக்கி அதிமுக உத்தரவு

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (11:53 IST)
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவுடன் தொடர்ந்து போனில் பலர் பேசி வரும் நிலையில் 5 பேரை கட்சியை விட்டு நீக்கி அதிமுக உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக எதிர்கட்சியாக நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலா தான் மீண்டும் வந்து அதிமுகவை மீட்க உள்ளதாக அதிமுக தொண்டர்கள் பலரிடம் செல்போன் வழியாக பேசி வரும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிக்கலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 15 பேரை நீக்கி ஈபிஎஸ்-ஓபிஎஸ் உத்தரவிட்டனர். ஆனால் அதன்பிறகும் கூட சசிக்கலா அதிமுகவினரோடு பேசும் வீடியோக்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் தற்போது கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ஈபிஎஸ் – ஓபிஎஸ் சேலம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 5 அதிமுக பிரமுகர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து பலர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments