Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினர் மண்டை உடைப்பு: திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டது

Webdunia
திங்கள், 16 மே 2016 (11:38 IST)
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆங்காங்கே வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றாலும், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் காலை 9மணி நிலவரப்படி 18.3சதவீத வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


 
 
இந்நிலையில் ஆங்காங்கே சில அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் சேப்பாபட்டு வாக்குச் சாவடியை அதிமுகவினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிமுகவினர் தாக்கியதில் திமுகவினர் 3 பேரின் மண்டை உடைந்ததாகவும், 3 வாகனம் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அந்த வாக்குச்சாவடியில் போதிய காவல் துறை அதிகாரிகள் இல்லாததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வந்துள்ளது.
 
மேலும், கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் அதிமுக, திமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் ரூ.2000 மகளிர் உதவித்தொகை: பொள்ளாச்சி ஜெயராமன்

மார்ச் 4 முதல் புதிய வரி அமல்.. டிரம்ப் அறிவிப்பால் உலக பங்குச்சந்தைகளுக்கு சிக்கல்?

டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக வெளியேறிய பிரமுகர்கள்..!

2 மாதங்களுக்கு பின் மீண்டும் சிலிண்டர் விலை உயர்வு.. சென்னையில் என்ன விலை?

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து.. ஒரே ஒரு வரிதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments