Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொல்பேச்சை கேட்காமல் சுயேட்சையாக போட்டி! – மேலும் 16 பேரை நீக்கிய அதிமுக!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (11:48 IST)
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட மேலும் 16 பேரை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பல இடங்களில் போட்டியிட்டது. பல பகுதிகளில் அதிமுக அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து அதிமுகவினர் சிலரே சுயேச்சையாக போட்டியிட்ட சம்பவங்களும் நடந்தன. அவ்வாறு கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டவர்களை அதிமுக கட்சியிலிருந்து நீக்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது வடபழனி, தி,நகர், அம்பத்தூர், ஆவடி, பாடி, முகப்பேர், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக இருந்த அதிமுகவினர் 16 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments