Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொன்னா கேக்கல.. சுயேட்சையாக போட்டி! – அடித்து தூக்கிய அதிமுக!

சொன்னா கேக்கல.. சுயேட்சையாக போட்டி! – அடித்து தூக்கிய அதிமுக!
, புதன், 16 பிப்ரவரி 2022 (11:35 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் சீட்டு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டவர்களை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் பலர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில் சிலர் தேர்ந்தெடுக்கப்படாததால் பல பகுதிகளில் சுயேட்சையாகவும் சொந்த கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் அதிமுக சார்பில் சீட்டு கிடைக்காததால் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக அதிமுக அதிரடியா அறிவித்துள்ளது. முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக திமுக 19 உறுப்பினர்களை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? கமல்ஹாசன்