Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 தொகுதிகளில் இரட்டை இலை.. பாமக-தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்: ஈபிஎஸ் திட்டம்..

Siva
திங்கள், 4 மார்ச் 2024 (08:04 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ள அதிமுக 30 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட போவதாகவும் 10 தொகுதிகளில் பாமக மற்றும் தேமுதிகவுக்கு பகிர்ந்து அளிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தற்போது புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி, எஸ்டிபிஐ மற்றும் புரட்சி பாரதம் ஆகிய ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தை முடித்து தலா ஒரு தொகுதி பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த ஐந்து கட்சிகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக 25 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் இந்த ஐந்து தொகுதிகளையும் சேர்த்தால் மொத்தம் 30 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

மீதமுள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகள் பாமகவுக்கும் நான்கு தொகுதிகள் தேமுதிகவுக்கும் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இரு கட்சிகளும் அவரவர் சின்னத்தில் போட்டியிடலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுக ஏற்கனவே 25 தொகுதி தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் அதிமுக 30 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஓபிஎஸ் அணிக்கு புதிய பெயர்.. அதிலும் அதிமுக பெயர் இருக்குதே..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments