Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுக் கடைகளை திறந்தால் ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் செய்த அதிமுகவினர்: பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 25 மே 2020 (17:48 IST)
மதுக் கடைகளை திறந்தால் ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் செய்த அதிமுக
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்த போது ஸ்டாலின் கருப்புக்கொடி காட்டி அவரது வீட்டு முன் தனது குடும்பத்தினருடன் போராட்டம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு கூடிய அதிமுகவினர் ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது கண்டனம் தெரிவித்த முக ஸ்டாலின் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் புதுவையில் மதுக்கடைகள் திறந்தபோது எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுக்கடைகளை திறந்ததை கண்டிக்காததை கண்டித்து முக ஸ்டாலினுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி மற்றும் கருப்பு பலூன்களை கையிலேந்தி போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து மதுக்கடைகள் திறப்பதை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே மனதளவில் எதிர்ப்பது இல்லை என்றும் அரசியலுக்காக மட்டுமே எதிர்ப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக் டாக் வீடியோவை நிறுத்தவில்லை.. 15 வயது சிறுமி கெளரவ கொலை..!

ஜெயலலிதா ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ.2500, 500 ரூபாய்க்கு சிலிண்டர்.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் நிறுத்தம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments