Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குன்னூரில் தேர்தலுக்கு கோழிக்குஞ்சு சப்ளை?! – பறிமுதல் செய்த பறக்கும் படை!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (17:14 IST)
தேர்தல் கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலில் உள்ள நிலையில் குன்னூரில் தேர்தல் பரிசாக கோழிக்குஞ்சுகள் வழங்கியபோது பறக்குபடையினர் பிடித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், கட்சி சார்பில் பரிசு பொருட்கள் அளித்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குன்னூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் என்ற கணக்கில் அரசியல் கட்சியினர் சிலர் கோழிக்குஞ்சுகளை விநியோகித்து வருவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடம் விரைந்த பறக்கும்படையினர் அவர்களிடமிருந்த சுமார் 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments