ஈரோடு கிழக்கில் பணநாயகத்திற்கு வெற்றி, ஜனநாயகத்திற்கு தோல்வி: தென்னரசு

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (12:49 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மிக அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். சற்று முன் வெளியான தகவலின் படி ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 53 ஆயிரத்து 548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 19360 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்பதும் ஈபிஎஸ் இளங்கோவன் சுமார் 30000 பாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து சற்றுமுன் விரக்தியுடன் வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசிய போது ஒரே ஒரு பதில் தான் நான் கூற விரும்புகிறேன் அது ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments