Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணுக்கெட்டிய வரை எதுவுமே தெரியவில்லை: மதுரை எம்பி சு வெங்கடேசன் குறித்து அதிமுக வேட்பாளர்..!

Mahendran
வெள்ளி, 29 மார்ச் 2024 (10:57 IST)
மதுரையில் லோக்சபா தொகுதிகள் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், மதுரை எம்பி சு வெங்கடேசன் இந்த பகுதியில் செய்துள்ள பணிகள் குறித்து பைனாகுலர் கொண்டு பார்க்க வந்துள்ளேன், ஆனால் அவர் செய்த எதுவுமே என் கண்களுக்கு தெரியவில்லை என தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் சரவணன், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெங்கடேசன், பாஜக சார்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சத்தியதேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்

இங்கு அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை இடையே தான் கடும் போட்டி இருப்பதாக தேர்தல் களத்தில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் சு வெங்கடேசன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் கேலியாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
 
அதில் அவர் பைனாகுலரை பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்து மதுரை எம்பி சு வெங்கடேசன் இங்கு செய்த பணிகளை பார்க்க பைனாகுலர் கொண்டு வந்தேன், ஆனால் அவர் செய்த எதுவுமே என் கண்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments