இன்று அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்: ஒரே நாளில் முடிக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் திட்டம்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (07:42 IST)
அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பனு கடந்த சில நாட்களாக கொடுத்து கொண்டிருந்த நிலையில் நேற்றுடன் வேட்புமனு கொடுக்கும் நாள் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் வேட்பாளர்களின் நேர்காணல் தொடங்குகிறது 
 
ஓபிஎஸ் ஈபிஎஸ் உள்பட முக்கிய பிரமுகர்கள் இந்த நேர்காணலை நடத்தி உள்ளனர். கடந்த 24ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட நிலையில்  நேற்று மாலையுடன் 8640 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 26 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த முறை மூன்றில் ஒரு பங்குதான் விருப்பமனு தாக்கல்செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
விருப்ப்மனு கொடுத்த 8640 பேர்களையும் இன்று ஒரே நாளில் நேர்காணல் செய்ய உள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை முடித்துவிட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments