Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (22:58 IST)
தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை மாவட்ட அதிமுக பகுதி நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா  வெளியிட்டார்.
 
இதில், பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணனுக்கு பதிலாக, ரமேஷ் நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், லட்சுமி நாராயணனை மீண்டும் அதே பதவியில் நியமிக்கக் கோரியும் அதிமுகவினர், அமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட்டனர்.
 
பாதுகாப்புக்கு அதிக அளவில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments