Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்

அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (22:58 IST)
தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை மாவட்ட அதிமுக பகுதி நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா  வெளியிட்டார்.
 
இதில், பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணனுக்கு பதிலாக, ரமேஷ் நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், லட்சுமி நாராயணனை மீண்டும் அதே பதவியில் நியமிக்கக் கோரியும் அதிமுகவினர், அமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட்டனர்.
 
பாதுகாப்புக்கு அதிக அளவில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil