போயஸ் இல்லம் முன் கோஷம் போட்ட அதிமுக தொண்டர்கள் கைது

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (00:50 IST)
கடந்த சில மணி நேரங்களாக வருமான வரித்துறையினர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின்போது ஜெயா டிவியின் எம்.டி விவேக் மற்றும் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக வெளிவந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து வேதா இல்லம் முன் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் மோடி ஒழிக என்றும், மத்திய அரசு ஒழிக என்றும், வருமான வரித்துறை அதிகாரிகள் ஒழிக என்றும் கோஷமிட்டு வந்தனர்.

இந்த நிலையில் வருமான வரித்துறை மற்றும் மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்ட அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இதே கோஷத்தை போட்ட அதிமுக வழக்கறிஞர்கள் கைது செய்யப்படவில்லை. அதிமுக தொண்டர்கள் கைது காரணமாக போயஸ் கார்டன் இல்லமே பரபரப்பில் மூழ்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments