Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் இல்லம் முன் கோஷம் போட்ட அதிமுக தொண்டர்கள் கைது

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (00:50 IST)
கடந்த சில மணி நேரங்களாக வருமான வரித்துறையினர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின்போது ஜெயா டிவியின் எம்.டி விவேக் மற்றும் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக வெளிவந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து வேதா இல்லம் முன் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் மோடி ஒழிக என்றும், மத்திய அரசு ஒழிக என்றும், வருமான வரித்துறை அதிகாரிகள் ஒழிக என்றும் கோஷமிட்டு வந்தனர்.

இந்த நிலையில் வருமான வரித்துறை மற்றும் மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்ட அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இதே கோஷத்தை போட்ட அதிமுக வழக்கறிஞர்கள் கைது செய்யப்படவில்லை. அதிமுக தொண்டர்கள் கைது காரணமாக போயஸ் கார்டன் இல்லமே பரபரப்பில் மூழ்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments