Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த அசிங்கம் நமக்கு தேவையா?: ஜெயானந்துக்கு அதிர்ச்சியளித்த அதிமுக!

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (16:40 IST)
எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மன்னார்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து டிடிவி தினகரன் அணியின் கொடியை ஏற்றி வைத்தார் திவாகரனின் மகன் ஜெயானந்த். அந்த கொடியை அதிமுகவினர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சசிகலாவின் சகோதரர் திவாகரன் தலைமையில் நேற்று மன்னார்குடியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திவாகரனின் மகன் ஜெயானந்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதற்காக தேரடியில் உள்ள எம்ஜிஆர் சிலை புதுப்பிக்கப்பட்டது.
 
அந்த சிலைக்கு திவாகரனின் மகன் ஜெயானந்த் மாலை அணிவித்து, அந்த இடத்தில் பறந்துகொண்டிருந்த அதிமுக கொடியை இறக்கிவிட்டு டிடிவி தினகரன் அணி பயன்படுத்தும் அண்ண படம் போடாத கொடியை ஏற்றினார்.
 
எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய அதிமுகவின் ஒரிஜினல் கொடியை இறக்கிவிட்டு, தினகரன் அணி பயன்படுத்தும் கொடியை ஏற்றியது அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜெயானந்த் ஏற்றிய அந்த கொடியை இறக்கி கிழித்துவிட்டு, அதிமுகவின் உண்மையான கொடியை ஏற்றினர் அதிமுகவினர். இந்த சம்பவம் திவாகரன் தரப்பிற்கு கோபமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments