நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்! – அதிமுக – பாஜக உரசல்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (10:45 IST)
அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து விமர்சித்ததற்கு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. தொடர்ந்து 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்த இந்த கூட்டணி தற்போதைய நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ”சட்டமன்றத்தில் ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவினரை பார்க்க முடியவில்லை” என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சியினரையே பாஜக விமர்சித்துள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் அதிமுக தயவால்தான் வெற்றி பெற்றனர் என கூறியுள்ள அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் இரு கட்சிகளிடையே பரபரப்பு எழுந்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments