பாஜக - அதிமுக கூட்டணி ப்ரேக் அப்? ஹிண்ட் கொடுக்கும் மூத்த தலைகள்!!

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (12:06 IST)
உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக - அதிமுக கூட்டணி அமைக்குமா என்பதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. 
 
தமிழகத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள்  கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 
 
எனவே, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்ததாக அதிமுகவினரே வெளிப்படையாக பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில் இது குறித்து பேசி பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அனாதை பிள்ளைக்கு அப்பன் யாரென்று தேடக்கூடாது என விமர்சித்தார். 
அதனை தொடர்ந்து தேர்தல் அறிவித்தவுடன் பாஜக அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். கூட்டணி தொடருமா, தொடராதா என்பதை நான் சொல்ல மாட்டேன் என தெரிவித்தார். 
 
இவர் இப்படி சொல்ல தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அனைத்து நேரங்களிலும் கட்சிகள் கூட்டணியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவதுதான் கூட்டணி. 
மத்திய மாநில அரசுகள் நட்புணர்வோடு இருக்கின்றன. மத்திய மாநில அரசுகள் நட்புறவோடு இருக்கும் காரணத்தால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். 
 
அப்படியென்றால் இந்த உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது, பாஜக - அதிமுக கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா என தெரியவரும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments