Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பதவியை பிடிப்பாரா எடப்பாடியார்? – 7ம் தேதி அதிமுகவில் தேர்தல்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (11:13 IST)
அதிமுக கட்சியின் முக்கிய பதவியான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

டிசம்பர் 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுக்கள் டிசம்பர் 5ல் சரிபார்க்கப்படும். வேட்புமனுவை திரும்ப பெற டிசம்பர் 6ம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ள நிலையில் இந்த தேர்தல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments