Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பதவியை பிடிப்பாரா எடப்பாடியார்? – 7ம் தேதி அதிமுகவில் தேர்தல்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (11:13 IST)
அதிமுக கட்சியின் முக்கிய பதவியான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

டிசம்பர் 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுக்கள் டிசம்பர் 5ல் சரிபார்க்கப்படும். வேட்புமனுவை திரும்ப பெற டிசம்பர் 6ம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ள நிலையில் இந்த தேர்தல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments