Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதைக்கு இடைத்தேர்தல் வாய்ப்பு இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (08:54 IST)
தேர்தலை சந்திக்க திமுகவும், அதிமுகவும் பயப்படுவதால் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 'தமிழகத்தில் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை. கஜா புயல், சூழல் சரியில்லை, ரெட் அலர்ட் போன்ற காரணங்களை தலைமைச்செயலர் மூலம் கூற வைத்து தேர்தலை ஒத்தி வைக்கவே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக டெபாசிட் இழந்தது, அதிமுக தோல்வி அடைந்தது. எனவே ஆண்ட திமுகவும், ஆட்சி செய்து வரும் அதிமுகவும் தேர்தலை சந்திக்க பயப்படுகிறது என்பதே உண்மையான நிலவரம். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெறவே வாய்ப்பு உள்ளது என்று பிரேமலதா கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் கூட்டணி குறித்து தேமுதிக முடிவு செய்யும் என்றும், கூட்டணி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தான் முடிவெடுப்பார் என்றும் பிரேமலதா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments