அரசு விழாவில் திமுக- அதிமுக "அமோக" மோதல்
அரசு விழாவில் திமுக- அதிமுக "அமோக" மோதல்
அரசு விழாவில் அதிமுக-வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கலெக்டர் சிக்கி தவித்தார்.
குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க பாடுபட்ட மார்ஷல் நேசமணியின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்காக, மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங், அதிமுக மாவட்ட செயலாளரும், ராஜ்ய சபா எம்பியுமான விஜயகுமார் மாலை மோட முயன்றனர்.
அப்போது, நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனும் உடன் மாலை அணிவிக்க முயன்றார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரித்தனர்.
இதனால், அதிமுகவினர் அம்மா வாழ்க என்றும், திமுகவினர் மு.க.ஸ்டாலின் வாழ்க என்றும் கோஷமிட்டனர். இவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட மாவட்ட கலெக்டர் தவியாய் தவித்துப் போனார்.