Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: வேல்முருகன்

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2015 (01:43 IST)
வரும் சட்ட மன்றத் தேர்தலின் போது, அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.
 

 
புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர்  தி.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஊழல் இல்லாத ஆட்சியைத் தருவதாக திமுக பொருளர் மு.க. ஸ்டாலின்  கூறுகிறார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் எந்தெந்தத் துறையில் என்னென்ன  ஊழல்  நடந்தது என்பதை நாடறியும். மக்கள் அறிவார்கள். அதை மக்கள் மறக்கமாட்டார்கள்.
 
மக்கள் நலக்கூட்டு இயக்கம் அமைத்துள்ள அரசியல் கட்சிகள் இதுவரை ஆட்சி அதிகாரத்தைப் பிடித்ததில்லை. அதனால், அதைப்பற்றிக் கணிக்க முடியாது.
 
தமிழகத்தில், முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தமிழ் மற்றும் தமிழர்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். எனவே, ஜெயலலிதாவை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். வரும் சட்ட மன்றத் தேர்தலின் போது, அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என என்றார். 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments