Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: வேல்முருகன்

அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: வேல்முருகன்
, வெள்ளி, 2 அக்டோபர் 2015 (01:43 IST)
வரும் சட்ட மன்றத் தேர்தலின் போது, அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.
 

 
புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர்  தி.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஊழல் இல்லாத ஆட்சியைத் தருவதாக திமுக பொருளர் மு.க. ஸ்டாலின்  கூறுகிறார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் எந்தெந்தத் துறையில் என்னென்ன  ஊழல்  நடந்தது என்பதை நாடறியும். மக்கள் அறிவார்கள். அதை மக்கள் மறக்கமாட்டார்கள்.
 
மக்கள் நலக்கூட்டு இயக்கம் அமைத்துள்ள அரசியல் கட்சிகள் இதுவரை ஆட்சி அதிகாரத்தைப் பிடித்ததில்லை. அதனால், அதைப்பற்றிக் கணிக்க முடியாது.
 
தமிழகத்தில், முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தமிழ் மற்றும் தமிழர்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். எனவே, ஜெயலலிதாவை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். வரும் சட்ட மன்றத் தேர்தலின் போது, அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil