Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக - பார்வட் பிளாக் மோதல்: தென்மாவட்டங்களில் பதட்டம்

அதிமுக - பார்வட் பிளாக் மோதல்: தென்மாவட்டங்களில் பதட்டம்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (06:40 IST)
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக பார்வட் பிளாக் இடையே மோதல் வெடித்தது.
 

 
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் நீதிபதி, வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, அருகே இருந்த தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்றார்.
 
ஆனால், அவர்களுக்கு முன்பாக, வேட்புமனு தாக்கல் செய்த பார்வட் பிளாக் கட்சியினர், தாங்கள் தான் முதலில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்போம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, தேவர் சிலைக்கு பார்வர்ட் பிளாக் கட்சியினர் பூட்டு போட்டனர்.
 
தேவர் சிலைக்கு பூட்டு போட்ட பார்வர்ட் பிளாக் நிர்வாகிகளை போலீசார் தேடித்தேடி கைது செய்தனர். இதனால், கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்க்கோரி மதுரை - தேனி நெடுஞ்சாலையில் அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அந்தப் பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
தகவல் அறிந்த உயர் போலீசார் அதிகாரிகள் போராட்டகாரர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
 
அதிமுக பார்வட் பிளாக் இடையே மோதல் காரணமாக தென்மாவட்டம் முழுவதும் பெரும் பதட்டம் நீடித்தது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments