இன்று காலையில், சென்னையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலந்து கொள்ளவில்லை.
பிரபல தமிழ் திரைப்பட நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள, தனது குடும்பத்தினருடன் மும்பை சென்றார். அவர் இன்று காலை, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு திரும்ப இருந்தார்.
மேலும், இன்று சென்னையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய குஷ்பு கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டத்தில் குஷ்பு வாராதது குறித்து மூத்த தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்ளதது குறித்து, தனது ட்விட்டரில் நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது:-
இன்று காலை, நான் பயணம் செய்யவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானத்தின் பயண நேரத்தை மாற்றியுள்ளது.
இதன் காரணமாகவே, தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முடியாமல் போனது.
உண்மை இதுவாக இருக்க, இது குறித்து மீடியா எழுதும் விதவிதமான கதைகளுக்களை கேட்க நான் காத்துள்ளேன் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.