Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி

Siva
செவ்வாய், 12 நவம்பர் 2024 (16:37 IST)
நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். குறிப்பிட்ட சமூகப் பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என பேசுவதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுப்பிய நீதிபதி, தன்னை கற்றவர், சமூக ஆர்வலர் என கூறிக் கொள்பவர் இவ்வாறு எப்படி பேசலாம் என்றும் தெரிவித்தார்.

கஸ்தூரி தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தான் கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் தலைமுறைவாக உள்ள கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கஸ்தூரி பேசிய காட்சிகள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்ட தாகவும், முன் ஜாமின் வழங்க அரசு தரப்பில் காட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்றே கூறப்படுகிறது. இன்னும் சில நிமிடங்களில் கஸ்தூரி முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments