Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை சாந்தினி!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (13:28 IST)
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய துணை நடிகை சாந்தினி திடீரென வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை நடிகை சாந்தினி என்பவர் புகார் அளித்தார் 
 
இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென சாந்தினி தனது வழக்கை வாபஸ் பெற்றார் 
 
இந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயன்றார். இதை அறிந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்
 
வழக்கை வாபஸ் பெற்ற பின்னர் நடிகை சாந்தினி திடீரென மீண்டும் முன்னாள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்