Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பானுப்ரியா விவகாரத்தில் திடீர் திருப்பம்: சிறுமியின் தாயார் அதிரடி கைது!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (06:39 IST)
நடிகை பானுப்ரியா, ஆந்திராவை சேர்ந்த சிறுமி ஒருவரை வேலைக்கு வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், சிறுமிக்கு சம்பளமும் கொடுக்காமல் உறவினர்களை பார்க்க அனுமதிக்காமல் சித்ரவதை செய்ததாகவும் அந்த சிறுமியின் தாயார் போலீஸ் புகார் கொடுத்தார். இதுகுறித்து ஆந்திர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னுடைய வீட்டில் பணிபுரிந்த சிறுமி, வீட்டில் உள்ள பொருட்களை திருடியதாக பானுப்ரியா தரப்பில் கொடுத்தபுகாரும் விசாரணை செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரணை செய்தபோது, பானுப்ரியாவின் வீட்டில் உள்ள தங்க நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி, அவர் தாயாரிடம் கொடுத்தனுப்பியதாக சிறுமி கூறியதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுமி சந்தியாவை போலீசார் மீட்டு சென்னையில் உள்ள சிறார் இல்லத்தில் அனுமதித்திருந்தனர். சிறுமியின் தாயார் மீதும், பானுப்ரியா தரப்பு போலீசில் புகார் தெரிவித்திருந்த நிலையில், சென்னை வந்த சிறுமியின் தாயாரை போலீசார் கைது செய்து  அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments