Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டியதாக படக்குழுவினர் மீது பிரபல நடிகை புகார்

கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டியதாக படக்குழுவினர் மீது பிரபல நடிகை புகார்
, வெள்ளி, 27 நவம்பர் 2015 (11:23 IST)
தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து மிரட்டியதாக படக்குழுவினர் மீது நடிகை அன்சிபா ஹாசன் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.


 

 
பரஞ்சோதி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அன்சிபா ஹாசன். இவர் மலையாளத்தில் வெளிவந்த  “த்ரிஷ்யம்” படத்தில் நடிகர் மோகன்லாலில் மகளாக நடித்தவர்.
 
இந்நிலையில் படக்குழுவினர் மீது அன்சிபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, நான் சில தமிழ் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தேன். ஒரு படத்தில் நடித்தபோது எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அந்த படத்துக்காக என்னை குட்டை பாவாடையை அணிய வைத்து புகைப்படம் எடுத்தார்கள். அந்த காட்சிகள் படத்துக்கு தேவை இல்லை. ஆனாலும் வற்புறுத்தி படம் பிடித்தார்கள். இதுபற்றி கேட்டபோது என்னை அவர்கள் மிரட்டினார்கள் என்றார்.
 
இந்த குற்றச்சாட்டு தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil