Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா செல்வமணி சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (09:15 IST)
ஆந்திர மாநில அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜா செல்வமணி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ரோஜா என்பதும் அதன் பின்னர் அவர் ஆந்திர மாநில அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றது ரோஜாவுக்கு சில முக்கியத்துவமான பதவி அளிக்கப்பட்டது என்பதும் தற்போது அவர் ஆந்திர மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரோஜா செல்வமணி கால் வீக்கம் காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments