Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்பது நீரப்பா, தருவதோ சூரப்பா: நடிகர் விவேக் டுவீட்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (13:23 IST)
நாங்கள் கேட்பது நீரப்பா, நீங்கள் கொடுப்பது சூரப்பா என்று விவேக் மத்திய அரசை கேலி செய்து டுவீட் செய்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுந்துள்ளது. அதிமுக சார்ப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
காவிரி விவாகரம் தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசு தொடர்ந்த வழக்கு வரும் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் என்ன சொல்லும் என்று தமிழகம் முழுவதும் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 
 
தற்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் மத்திய அரசை கேலி செய்யும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,
 
 
நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீரப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments