Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல: ஸ்டெர்லைட் குறித்து விவேக்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (15:08 IST)
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்த போதிலும் கடந்த ஒரு சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டம் உலகின் கவனத்தை திருப்பியுள்ளது. லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன்பே தமிழர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு தற்போது திரை நட்சத்திரங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட ஒருசில நடிகர்கள் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை டுவிட்டரில் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விவேக் தனது டுவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விவேக் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு உயிர் கொல்லி நச்சுக் கழிவுகள் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் இதுவரை கலந்தனவோ தெரியவில்லையே? அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மன்றாடி கேட்கிறேன்.அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல! என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments