ஆர்.கே.நகர் தேர்தலில் அதிரடி திருப்பம் - விஷால் வேட்பு மனு நிராகரிப்பு

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (17:34 IST)
ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


 
ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.
 
இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

விஷாலின் மனுவை ஏற்கக்கூடாது என அதிமுக, திமுக கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், 2 மணி நேரத்திற்கும் மேல் பரீசீலனையில் இருந்த விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, படிவம் 26 பூர்த்தி செய்யப்படாததால், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

சிந்து நதிக்கு அடுத்து ரவி நதியும் இல்லை!.. பாகிஸ்தானுக்கு இந்தியா செக்!...

7 வயது சிறுமியை கொன்று பிளாஸ்டிக் பேரலில் சடலத்தை மறைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனி விமானத்தில் சென்றதால் பிரச்சனையா? சட்டமன்றத்தில் கடும் விவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments