Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் விவகாரம் - விஜய் பரபரப்பு அறிக்கை

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (16:18 IST)
மெர்சல் திரைப்படத்தை வெற்றிப்படமாக ஆக்கியதற்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 

 
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தரராஜன் போர்க்கொடி தூக்கினார். அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர். 
 
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், மெர்சல் திரைப்படம் வசூல்ரீதியாக மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இதுவரை ரூ.150 கோடியை படம் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளர். அதில் “ மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில், என் திரையுலக நண்பர்கள், ஊடகங்கள், பத்திரிக்கை, அரசியல் தலைவர்கள், எனது ரசிகர்கள் என அனைவரும் மிகப்பெரும் ஆதரவு தந்தனர்.
 
மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments