Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சூர்யா விவகாரம் : சம்பந்தப்பட்ட பெண்மணி விளக்கம்

நடிகர் சூர்யா விவகாரம் : சம்பந்தப்பட்ட பெண்மணி விளக்கம்
, புதன், 1 ஜூன் 2016 (12:29 IST)
நடிகர் சூர்யா இளைஞரை தாக்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண்மணி டிவிட்டரில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை அடையாறு திருவிக மேம்பாலத்தில் ஒரு பெண்மணி ஓட்டிய கார் மீது, மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் மோதியதால், அந்த வாலிபருக்கும், அந்த பெண்மனிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அங்கு வந்த நடிகர் சூர்யா, அந்த இளைஞனை அடித்ததாகவும் கூறப்பட்டது. 
 
அந்த வாலிபர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த வாலிபரை அடிக்கவில்லை என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டது. அந்த வாலிபரும் சூர்யா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுள்ளார்.
 
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த பெண்மனி புஷ்பா கிருஷ்ணசுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
“அந்த இரு இளைஞர்களும் என்னை பயமுறுத்தி மிரட்டிய போது, அவர்கள் கைகள் என் மீது படாமல் நடிகர் சூர்யா பார்த்துக் கொண்டார். அந்த வாலிபர்கள் என்னை மிரட்டினார்கள். என் கார் கண்ணாடியை உடைக்க முயன்றார்கள். மேலும், பாதுகாப்பு கருதி என்னுடைய காருக்குள் அமர  என்னை அவர்கள் விடவில்லை.  என்னிடம் அவர்கள் பணம் கேட்டு மிரட்டினர். 

webdunia

 

 
நான் அந்த கூட்டத்தில் தனியாக நின்று கொண்டிருந்தேன். அவர்கள் யாருக்கோ போன் செய்து நடவடிக்கை எடுக்கப் போவதாக என்னை மிரட்டினார்கள். 

webdunia

 

 
தன்னுடைய காரை நிறுத்தி இறங்கி வந்த சூர்யா, பெண்களை தொடக்கூடாது என்று அவர்களை எச்சரித்தார். தக்க சமயத்தில் அவர் எனக்கு உதவி செய்தார்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திரா காந்திக்கு ஒரு நீதி? ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா? கொதிக்கும் கருணாநிதி