நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட முடிவு - தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (14:20 IST)
நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன், அவரது நடிப்புத் திறமையின் மூலம் கலைமாமணி, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் திறந்து வைத்தார்.
 
சிவாஜியின் குடும்பத்தினர் மற்றும் நடிகர் சங்கத்தினர் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என வற்புறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அக்டோபர் 1 ஆம் தேதியான சிவாஜி பிறந்தநாள், இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். 
முதல்வரின் அறிவிப்பிற்கு சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments