Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட முடிவு - தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (14:20 IST)
நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன், அவரது நடிப்புத் திறமையின் மூலம் கலைமாமணி, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் திறந்து வைத்தார்.
 
சிவாஜியின் குடும்பத்தினர் மற்றும் நடிகர் சங்கத்தினர் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என வற்புறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அக்டோபர் 1 ஆம் தேதியான சிவாஜி பிறந்தநாள், இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். 
முதல்வரின் அறிவிப்பிற்கு சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம் புதிய திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments