Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தம்பதியரை ஏமாற்றிய நடிகர் சரத்குமார்!

தம்பதியரை ஏமாற்றிய நடிகர் சரத்குமார்!
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (16:21 IST)
தென்காசி தொகுதியின் எம்.எல்.ஏ வாக சரத்குமார் இருந்தபோது, அரசு மருத்துவமனை வளாகத்தில் சொந்த செலவில் பிரம்மாண்டமான பசுமைப் பூங்காவை அமைத்தார்.


 


மேலும், அந்த பூங்காவை பராமரிப்பதற்காக கணவன் மனைவியான ஞானமுத்து - வசந்தகுமாரி ஆகியோரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து மாத ஊதியம் கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் கொடுப்பதையும், பூங்கா பராமரிப்புக்கு நிதி கொடுப்பதையும் நிறுத்திவிட்டார். கடந்த பத்து மாதங்களாக இன்றளவிலும் எந்த தரப்பிலிருந்தும் அவர்கள் ஊதியம் பெறவில்லை.

பூங்காவை பராமரிக்காமலும், தண்ணீரி விட்டாமலும் இருந்தால் பூங்கா பசுமை இழந்து முழுவதுமாக சீரழந்துவிடும் என்பதால், ஞானமுத்துவும் வசந்தகுமாரியும் யாருடைய உதவியுமின்றி தங்களது சொந்த செலவில் பூங்காவை பராமரித்து, அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்டம்பர்-2: சென்னையில் பரபரப்பு போஸ்டர்