Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழிச்சாலை தேவை தான்... ஆனால்? என்ன சொல்கிறார் ரஜினிகாந்த்

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (11:35 IST)
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை தேவையான ஒரு திட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. 
 
இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசோ சாலை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் எட்டு வழிச்சாலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டிய ஒரு நல்ல திட்டம். வளர்ச்சிகளை கொண்டு வந்தால் தான் நாடு முன்னேற முடியும்.
 
ஆனால் அதே வேளையில் இதனால் பாதிக்கப்படும் மக்களை திருப்திபடுத்தும் வகையில் அவர்களுக்கு பணமோ இடமோ கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. முடிந்த அளவுக்கு விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதிக்காமல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நல்லது என ரஜினிகாந்த தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments