Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் : பழ. கருப்பையா

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (18:26 IST)
நடிகர் ரஜினி மற்றும் கலெக்டர் சகாயாம் போன்றவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று பழ. கருப்பையா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
திருப்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக விழாவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டு  ‘அரசியல் அறம்’ என்ற தலைப்பில் பேசினார் .  அவர் பேசும் போது “இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக மாற்றியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் அவனை சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாகவே உருவாக்கி இருக்கிறோம். 
 
இன்றைக்கு அரசியல் என்பது தொழிலாகிவிட்டது. பதவியை பிடிக்க வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வருகிறார்கள். லஞ்சம் இன்றைக்கு வாழ்க்கை முறையாகிவிட்டது. நேர்மையான ஒருவன் அரசியலிலிருந்து ஒதுக்கப்படுகிறான். சட்டத்தை சார்ந்து இருக்கும் அரசியில் நிச்சயம் தோற்கும்.
 
ஆனால் அறத்தை தாங்கி நிற்கு அரசியல் என்றும் தோற்காது. அரசியல்வாதிகள் மக்களுக்கு எதையும் உணர்த்துவதில்லை. அதனாலேயே மக்கள் அரசியலை வெறுக்கிறார்கள். மையப்படுத்தி ஊழல் செய்யும் முறையை அதிமுகவினர் கண்டுபிடித்துள்ளனர்” என்று பேசினார்.
 
அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது “அரசியலில் அடுத்து என்ன செய்வது என்று நன்றாக யோசித்த பின்பே முடிவெடுப்பேன். என் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை தப்ப விட்டு விட்டனர். 
 
நடிகர் ரஜினிகாந்த், கலெக்டர் சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் ஏன் மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை” என்று கூறினார். 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments