Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவரத்தில் சாம்பல் ஆன நடுக்குப்பம் மீன் மார்க்கெட் - ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் நிதியுதவி

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (10:27 IST)
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்ட போது, எழுந்த கலவரத்தில் தீ வைக்கப்பட்டு சாம்பலான சென்னை நடுக்குப்பம் மீன் மார்கெட் பகுதி மக்களுக்கு நிதியுதவி அளிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.


 

 
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை, அங்கிருந்து வெளியேற்றும் பணியில் கடந்த 23ம் தேதி அதிகாலை தமிழக போலீசார் ஈடுபட்டனர். அப்போது, மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள திருவல்லிக்கேனி, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. மோதல் கலவரமாக மாறியது.
 
இதில், நடுக்குப்பம் மீன் மார்க்கெட் தீ வைத்து கொளுத்தப்பட்டு சாம்பலானது. இதனால், அங்கு மீன் வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்த ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த ஏராளாமனோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், போலீசார்தான் தங்கள் மார்கெட்டுக்கு தீ வைத்தனர் என அந்தப் பகுதி  மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.


 

 
மேலும், கடந்த 5 நாட்களாக அந்த பகுதி மக்கள் எந்த வியாபாரமும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். தங்களுக்கு அரசு உதவ முன் வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
 
இந்நிலையில், நடிகரும், ஜல்லிக்கட்டு ஆதரவாளருமான ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். எரிந்து சாம்பலான மீன் மார்க்கெட்டை புணரமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை வெறும் 700 ரூபாய்க்கு விற்பனை செய்த இளம்பெண்.. என்ன காரணம்?

நெல்லை மாவட்டத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments