Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊடகங்களை பார்த்து செருப்படி கேள்விகேட்ட நடிகர் பிரகாஷ்ராஜ்!

ஊடகங்களை பார்த்து செருப்படி கேள்விகேட்ட நடிகர் பிரகாஷ்ராஜ்!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2017 (10:56 IST)
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 13 நாட்களாக மண்டை ஓட்டுடன், கோமனத்துடன் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்குதல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்து தென்னிந்திய நடிகர் சங்கம் டெல்லி சென்று விவசாயிகளை நேற்று சந்தித்தனர். மேலும் நிதியமைச்சரையும் சந்தித்து மனு அளித்தனர். நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.
 
இவர்களை தேசிய ஊடகங்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரகாஷ்ராஜிடம் மைக்கை நீட்டி பேட்டியெடுத்தனர். ஆனால் பிரகாஷ்ராஜ், 11 நாட்களாக விவசாயிகள் போராடுகிறார்கள், அப்போது வராத நீங்கள், இப்போது நடிகர்கள் வந்தவுடன் வருகிறீர்கள். இவ்வளவு நாட்களாக எங்கு சென்றீர்கள் என்று முகத்தில் அறையும்படி கேட்டார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments