Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்ற பொன்வண்னன்...

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (12:29 IST)
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்த நடிகர் பொன்வண்ணன் அதை வாபஸ் பெற்றுள்ளார்.


 
நடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது  தனக்குப் பிடிக்காததால், தான் வகித்துவரும் நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கடிதம் கொடுத்துள்ளார் பொன்வண்ணன். 
 
நடிகர் சங்கத்தில் பதவியேற்கும்போது, எந்த அரசியல் கட்சியையும் சாராமல் இருக்க வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டதாகவும், ஆனால் விஷால் அதிலிருந்து விலகியிருப்பதாகவும் பொன்வண்ணன் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம், பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தைப் பற்றி விவாதிப்பதற்காக நேற்று முன்தினம் கூடியது. அதில், பொன்வண்ணனின் கருத்துகளுக்கு மதிப்பளித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கியும், சட்டத்திற்குப் புறம்பாகத் தான் எதுவும் செய்யவில்லை என்றும் விஷால் விளக்கினார். 
 
பொன்வண்ணனின் பணி நடிகர் சங்கத்தில் தொடர வேண்டும் என்பதற்காக, அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை  திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தன் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாக பொன்வண்ணன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments