Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி விவகாரத்தில் ரஜினி இதைத்தான் செய்ய வேண்டும் : பார்த்திபன் கோரிக்கை

காவிரி விவகாரத்தில் ரஜினி இதைத்தான் செய்ய வேண்டும் : பார்த்திபன் கோரிக்கை

காவிரி விவகாரத்தில் ரஜினி இதைத்தான் செய்ய வேண்டும் : பார்த்திபன் கோரிக்கை
, புதன், 14 செப்டம்பர் 2016 (16:57 IST)
காவிரி விவகாரத்தில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவது தொடர்பாக, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம் வெடித்து. தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். தமிழர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 50 பேருந்துகள் மற்றும் 10 லாரிகளுக்கும் மேல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
 
கர்நாடகா தொடர்பான பிரச்சனை என்றாலே, நடிகர் ரஜினிகாந்தை அனைவரும் இழுப்பதாக வழக்கமான ஒன்று. 
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த பார்த்திபன், “ரஜினியின் வீட்டிற்கு பிரதமர் மோடி நேரில் வருகிற அளவுக்கு, அவர்கள் இருவருக்கும் நட்பு இருக்கிறது. எனவே ரஜினி, பிரதமரிடம் பேசினால் பிரச்சனை தீர்ந்துவிடும்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அச்சுறுத்தும் சிக்கன்குனியா: கொசு பிடியில் 12 ஆயிரம் பேர்