Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''என்னிடம் பணம் பறிக்க முயற்சி''.....முன்னாள் மனைவி மீது நடிகர் நவாசுதீன் சித்திக் புகார்

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (17:04 IST)
என்னிடம் பணம் பறிப்பதற்காக என் மீது  அலியா வழக்குகளைப் போட்டிருக்கிறார் என்று நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர்  நவாசுதீன் சித்திக். இவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் நவசுதீன் சித்திக்.

நவாசுதீன் சித்திக் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக, குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியேறிய அவரது முன்னாள் மனைவி அலியா போலீஸில் புகாரளித்தார்.

இதுகுறித்து நவாசுதீன் சித்திக் கூறியதாவது: ,’’ நான் அமைதியாக இருப்பதால் என்னை எல்லோரும் கெட்டவாகப் பார்க்கிறார்கள். அலியாவும், நானும் விவாகரத்து செய்துவிட்டோம். குழந்தைகளைப் பணத்திற்காக வேண்டி, அவர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். தற்போது அலியாவுக்கு நான் மாதம் தோறும் ரூ.10 லட்சம் பணம் கொடுத்து வருகிறேன்.. துபாய் செல்லும்போது, முன்பு மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கொடுத்து வந்தேன்….அதுதவிர துபாயில் அவர் தங்கியுள்ள வாடகை வீட்டிற்கும் நான் வாடகை கொடுத்து வருகிறேன்….அவருக்குப் பணம் வேண்டுமென்பதற்காக என் குழந்தைகளைப் பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு என்னிடம் வழக்குகள் போட்டிருக்கிறார். அலியாவுக்குப் பணம்தான் முக்கியம்….

நான் சட்டத்தை நம்புகிறேன் அனைத்து வழக்குகளில் வெல்லுவேன் ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments