Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி.. வேலூர் தொகுதி என்ன ஆகும்?

Mahendran
புதன், 17 ஏப்ரல் 2024 (15:17 IST)
நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் மன்சூர் அலிகான் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்த நிலையில் சில நாட்களிலேயே அவர் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடும் நிலையில் கடந்த சில நாட்களாக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள நிலையில் வித்தியாசமாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
இந்த நிலையில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து குடியாத்தம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அவருக்கு நெஞ்சுவலி என்ற தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அவரது உடல்நிலை குறித்த எந்தவித தகவலும் இன்னும் மருத்துவமனை தெரிவிக்கவில்லை. இதனால் வேலூர் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments